நாம் நமக்கு என்ன செய்ய முடியவில்லையோ (யோவா 17:4)
- மார்டின் லோயட் ஜோன்ஸ்
இரட்சிப்பின் கிரியை கிறிஸ்து தாமே செய்ய வேண்டிய ஒன்று, எனவே அவர் தான் அதைச் செய்து முடித்ததாக பேச முடியும். "நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன்." இப்போது நான் அதை எதிர்மறையான வடிவத்தில் வைக்க விரும்புகிறேன்: நாம் என்ன செய்ய வேண்டும் என்று நமக்குச் சொல்ல கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வரவில்லை; நமக்காக நாம் செய்ய முடியாத ஒன்றை நமக்காகச் அவர் தானே செய்து முடிக்க வந்தார். இந்த எதிர்மறைகள் அனைத்தும் மிகவும் அவசியமானவை. ஏனென்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தை நம்புகிறவர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவர் இந்த உலகத்திற்கு என்ன செய்ய வந்தார் என்று கேட்டால், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்ல அவர் வந்தார் என்பது அவர்களின் பதில். (அல்லது) நற்கிரியைகளைப் பற்றிப் பேசி, நன்மை செய்தால், நம்மைக் கிறிஸ்தவர்களாக்கிக் கொண்டு, கடவுளுக்கு முன்பாக நம்மைச் சரிப்படுத்துவோம் என்று சொல்கிறார்கள். இல்லை! "நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன்” என்று நம் ஆண்டவர் இங்கே கூறுகிறார். நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மையும் இங்கே வலியுறுத்தப்படுகிறதுதும் என்னவென்றால், அதைப் புரிந்துகொள்வதற்கான சிறந்த வழி, அவர் என்ன செய்தார், மேலும் அவர் முன்பு என்ன செய்தார் என்பதைக் கருத்தில் கொள்வதுதான். அவர் ஒரு கிரியையை செய்து முடிக்க வந்தார். நாம் என்ன செய்தோம் என்பதில் அல்ல இரட்சிப்பு; இரட்சிப்பு முழுவதும் இயேசு கிறிஸ்துவைச் சார்ந்தது. இரட்சிப்பின் கிரியை என்பது அவருடைய கிரியை/வேலை மற்றும் அவருடைய செயலாகும், மேலும் அவர் அதைச் செய்ய குறிப்பாக வந்தார்; மற்றும் இங்கே, இந்த வார்த்தைகளில், அவர் சிலுவையில் தம்முடைய மரணத்தை எதிர்நோக்குகிறார், அதை தாம் செய்து முடிந்ததாக இறந்த காலத்தில் கூறுகிறார். சிலுவையின் நிழலின் கீழ், அவர் தமது முழு கிரியையையும் மறுபரிசீலனை செய்கிறார். ஆகவே அவர், "நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன்" என்று சொல்ல முடிகிறது. "நான் அதை முடித்துவிட்டேன்." ஆகவே, இரட்சிப்பைக் குறித்த புரிதலில் நாம் சரியாக இருக்கிறோமா (அ) தவறான புரிதலில் இருக்கிறோமா என்பதை அறிய எளிய வழி, 'கிறிஸ்தவனின் இரட்சிப்பு என்பது முற்றும் முழுவதும் கிறிஸ்து நிறைவேற்றிய கிரியைகளை மையப்படுத்தியது என்று உணருகிறோமா' என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
சிந்திக்க ஒரு சிந்தனை
"கிறிஸ்து நமக்காக நாம் ஒருபோதும் செய்ய முடியாத ஒன்றை நமக்காக அவர் செய்ய வந்தார்."