ஆண்ட்ரூ கிங்ஸ்லி ராஜ், 20/04/2025 அன்று சாத்தூர் கிறிஸ்தவ சகோதர சபையில் பகிர்ந்துகொண்ட தேவ செய்தி
மத்தேயு 5:1-3
1. அவர் திரளான ஜனங்களைக் கண்டு மலையின்மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள். 2. அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்: 3. ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. (என்றார்).
இது கர்த்தருடைய வார்த்தை. தேவன் தாமே இந்த வார்த்தைகளை நமக்கு ஆசீர்வதித்துக்கொடுப்பாராக.
“அவர் ஜனங்களைக் கண்டு மலையின்மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள்.”: மனிதனுடைய மிகப்பெரிய தேவை ஆத்தும இரட்சிப்பு. அந்த ஆத்தும இரட்சிப்பு குன்றாத வேத வார்த்தையினால் தான் சாத்தியம். அந்த ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தை தான் இந்தவொரு மனிதனையும் உயிர்ப்பிக்கும். இப்படி ஆத்துமாக்களுக்கு அமுதசுரபியாக இருக்கிற கர்த்தருடைய வார்த்தை எங்கே கிடைக்குமோ, அங்கே நம் நாடித் தேடி ஓடி நம்முடைய பசியைத் தீர்த்துக்கொள்ளவேண்டும். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். வசனம் கிடைக்கக்கூடாத இந்த பஞ்ச காலத்திலும் இங்கொன்றும் அங்கொன்றுமாக தேவன் தம்முடைய வார்த்தைக்காக வைராக்கியமாக நிற்கிறவர்களை எழுப்புகிறார்.
இங்கே நாம் கவணிக்கவேண்டிய விசயம், ஜனங்கள் வார்த்தையைக் கேட்க ஏதோ ஒரு மேடைப் பேச்சாளரைத் தேடிப்போகவில்லை, நகைச்சிவைப் பிரசங்கிகளைத் தேடிப்போகவில்லை, பட்டிமன்றங்களைத் தேடிப்போகவில்லை, இசைக் கச்சேரிகளைத் தேடிப் பொகவில்லை. தேவனுடைய வார்த்தையை உண்மையாக போதிக்கிற ஒருவரைத் தேடிபோனார்கள். எல்லா அதிகாரிகளுக்கும் மத போதகர்களுக்கும் எதிராக துணிந்து சத்தியத்தைப் பேசிய ஒருவரைத் தேடிப்போனார்கள். கர்த்தருடைய வார்த்தையை திரித்து, தங்கள் சொந்த கருத்துகளையும், சொந்த கட்டளைகளையும் பேசிக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் கர்த்தருடைய வார்த்தை இதைத் தான் சொல்கிறது என்று அந்த வார்த்தையை உள்ளபடி போதிக்கிறவரைத் தேடிப்போனார்கள். கர்த்தருடைய வேதத்தில் பசி தாகமுள்ளவர்களாய் அவரைத் தேடிப்போனார்கள். அன்று சீனாய் மலையில் இடி முழக்கங்களோடு பேசிய அதே யேகோவா தேவனைத் தேடிப்போனார்கள்.
2. இப்படி திரளான ஜனங்கள் தேவை வார்த்தைக் கிடைக்ககூடாமல் ஆத்துமாவில் பசியுற்றவர்களாய் தாகமுற்றவர்களாய், அவரிடத்தில் வரும்பொழுது, அவர் மனதுருகுகிறார். அவர்கள் மீது பரிதாபம் கொண்டு, சாந்தத்தோடு தமது வாயைத் திறந்து அவர்கள் பசியை ஆற்ற ஆசைகொள்ளுகிறார். என்ன ஒரு இரக்கமுள்ள ஆண்டவர்! (மத் 9:36)
3. இயேசு கிறிஸ்துவின் மலைப் பிரசங்கத்தின் முதல் குறிப்பு:
“ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்” (மத் 5:3)
பாக்கியவான்கள் என்றால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று பொருள். “ஆவியில் எளிமையுள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.” என்று இயேசு கிறிஸ்து இங்கே கூறிகிறார். இப்படியான ஆசீர்வதிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளையாக நாம் இருக்கவேண்டும் என்றால் நாம் ஆவியில் எளிமையுள்ளவர்களாய் இருக்கவேண்டும் என்று இயேசு கிறிஸ்து பிரசங்கிக்கிறார். நீ ஒரு கிறிஸ்தவனாக இருக்கவேண்டும் என்றால், நீ ஆவியில் எளிமையுள்ளவனாய் இருக்கவேண்டும். நீ கர்த்தருடைய பிள்ளையாக இருக்கவேண்டும் என்றால், நீ ஆவியில் எளிமையுள்ளவனாக இருக்கவேண்டும்.
ஆவியில் எளிமையுள்ளவர்களாய் இருப்பது என்றால் என்ன என்பதை நாம் சரியாக விளங்கிக்கொள்ளுதல் அவசியம்:
ஆவியில் எளிமையுள்ளவர்களாய் இருப்பது என்றால் என்ன என்பதைப் பார்ப்பதற்கு முன், எப்படி இருப்பது ஆவியில் எளிமையுள்ளவர்களாய் இருப்பது அல்ல என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.
1. நீ பூமியில் பணக்காரனாகவோ ஏழையாகவோ இருப்பதைப் பற்றி ஆண்டவர் இங்கே பேசவில்லை. நீ பணம் சம்பாதிக்கத்தெரியாதவனாக ஏழையாக இருந்தால் கர்த்தர் உண்மேல் பிரியமாய் இருப்பார் என்று நினைக்காதே. நீ பூமியில் சம்பாதிக்கத் தெரிந்தவனாய் இருந்தாலும், பணம் சம்பாதிக்கத் தெரியாத ஏழையாக இருந்தாலும் இவை உன்னை ஒருபோதும் பரலோக ராஜ்யத்திற்குள் கொண்டு போகாது. நீ எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும், அந்த பணத்தால் கர்த்தருடைய ஆசீர்வாதத்தை வாங்க முடியாது. நீ எவ்வளவு பெரிய ஏழையாக இருந்தாலும் அது உன்னை ஆசீர்வதிக்கப்பட்டவனாய் மாற்றாது.
2. இரண்டாவதாக, ஆவியில் எளிமையுள்ளவனாய் இருப்பது என்றால் மனிதர்கள் முன்பாக தாழ்மையாக குணிந்து நடப்பது அல்ல. சிலரைப் பெறியோர் என்று நினைத்து அவர்களிடம் பேசும்போது தடுமாறும் மெல்லிய குரலில் பேசுவதல்ல. உன்னைவிட வயதில் மூத்தவர்களுக்கும், உன்னைவிட பதவியில் உயர்ந்தவர்களுக்கும் பயந்து அவர்கள் முன் தாழ்மையாக இருப்பதல்ல, ஆவியில் எளிமையுள்ளவனாய் இருப்பது. அது நீ மனதளவில் எளிமையுள்ளவனாய் இருக்கிறாய் என்பதையே காட்டுகிறது. இதுவில்லாம் உன்னை ஆசீர்வதிக்கப்பட்டவனாய் மாற்றாது.
3. மூன்றாவதாக, ஆவியில் எளிமையுள்ளவர்களாய் இருப்பது என்றால், உன்னுடைய பணம், ஆஸ்தி, செல்வம் யாவையும் துரந்து ஒரு சந்நியாசியாகவோ, மத போதகனாகவோ மாறுவதல்ல. நீ உன் பணம் செல்வம் ஆஸ்தி யாவையும் விற்பது உன்னை ஆசீர்வதிக்கப்பட்டவனாய் மாற்றாது.
4. நான்காவதாக, ஆவியில் ஏழ்மையுள்ளவர்களாய் இருப்பது என்றால், ஆவியில் வெறுமனே வெறுமையாய் இருப்பதல்ல. மனம் புதிதாகாமல், கிறிஸ்துவின் இரட்சிப்பை அடையாமல், ஆத்தும மீட்பு தேவையுள்ளோராக மட்டும் இருப்பவர்கள் அல்ல ஆவியில் எளிமையுள்ளவர்கள்.
ஆவியில் எளிமையுள்ளவர்கள்:
1. ஆவியில் எளிமையுள்ளவர்கள் தங்கள் பாவ அவல நிலையை உணர்ந்தவர்கள். பரிசுத்தமுள்ள தேவனுக்கு முன்பாக நான் அருவருக்கப்படத்தக்கவன் என்றும், தான் நித்திய நித்தியமாக தேவனுடைய கோபத்துக்குப் பாத்திரவானை இருக்கிறேன் என்றும் எரிநரகம் தான் எனக்குத் தகுதியான இடம் என்றும் உணர்ட்ந்தவன். தன்னுடைய தகுதியின்மையை உணர்ந்தவனாக ஆயக்காரனைப்போல தன் மார்பிலே அடித்துக்கொண்டு “தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்” என்று கெஞ்சுகிறவனே ஆவியில் எளிமையுள்ளவன்.
2. ஆவியில் எளிமையுள்ளவர்கள் தங்கள் முயற்சிகள் யாவும் தோற்றுப்போயின என்று உணர்ந்தவர்கள். ஆவியில் எளிமையுள்ளவர்கள் தங்கள் சுய கிரியைகள் தங்கள் ஆத்தும இரட்சிப்புக்கு துளியும் உதவாது என்று உணர்ந்தவர்கள். தங்களுடைய சுயநீதி அழுக்கடைந்த அடுப்பங்கரைத் துணி என்றும், தங்களுக்கு குமாரனின் கல்யான விருந்துக்குள் சென்று விருந்துண்ண ஒரு நல்ல புதுத்துணி தங்களுக்கு வேண்டும் என்றும் உணர்ண்ந்தவர்களாக கிறிஸ்துவை நோக்கி கெஞ்சுகிறவர்கள். இவர்கள் தாங்கள் ஆத்துமாவில் ஏழ்மையாக, தேவையுள்ளோர்களாக இருக்கிறோம் என்று உணர்ந்தவர்கள்.
வாசிக்க வெளி 3:17 ->
17 நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்;
18 நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்.
3. அடுத்தபடியாக ஆவியில் எளிமையுள்ளவர்கள் யார் என்று பார்க்கும்பொழுது, அவர்கள் தங்களை முற்றிலும் வெறுத்தவர்கள். தங்கள் ஆத்தும வெறுமையை மெய்யாய் உணர்ந்து தங்களைத் தாழ்த்துகிறவர்கள். கிறிஸ்துவே தங்களுக்கு எல்லாவற்றிலும் எல்லாமுமாக இருப்பவர் என்பதை உணர்ந்து கிறிஸ்துவையே சார்ந்துகொள்ளுகிறவர்கள்.
பிலிப்பியர் 3:9-11 ->
9 நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கும், நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய்த் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்,
10 இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்,
11 அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.
4. அடுத்தபடியாக ஆவியில் எளிமையுள்ளவர்கள் யார் என்று பார்க்கும்பொழுது, இவர்கள் தங்களில் தாங்களே ஒன்றுமில்லை என்றும், தங்களுடைய நிர்ன்பந்தமான பாவ அவலநிலையை உணர்ந்தவர்களாக ஆண்டவருடைய கிருபைக்காக கெஞ்சுகிறவர்கள். பெருமலை பொழிந்தது பள்ளத்தாக்குகளில் தண்ணீர் ஓடுவது போல, ஆண்டவருடைய தம்முடைய கிருபையை வரண்ட பாலைவனமான இருதயத்திலேதான் ஊற்றுவார்.
சங்கீதம் 104:10 -> அவர் பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை வரவிடுகிறார்; அவைகள் மலைகள் நடுவே ஓடுகிறது.
5. அடுத்தபடியாக, ஏன் ஆவியில் எளிமையுள்ளவர்களாக இருப்பது அவசியம் என்று பார்க்கும்பொழுது, ஆவியில் எளிமையில்லாம் தேவகிருபை சாத்தியமற்றது. ஆவியில் வெறுமையானவனைத் தேவன் தமது ஆவியால் நிரப்புகிறார். தண்ணீருள்ள கலசத்தில் எப்படி நாம் ஒரு பழரசத்தை ஊற்றுவதில்லையோ, ஒரு வெறுமையான பாத்துரத்தைத் தேடி அதில் ஊற்றுகிறோமோ, அதேபோல, ஆவியில் முற்றிலும் வெறுமையாய் இருப்பவர்களின் இருதயத்தில்தான் ஆண்டவர் தமது கிருபையை ஊற்ற முடியும்.
அடுத்தபடியாக, ஏன் ஆவியில் எளிமையுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்று நாம் பார்க்கும்பொழுது, கிறிஸ்து எவ்வளவு பெரியவர் என்பதை நீ அறிந்துகொள்ள நீ ஆவியில் எளிமையுள்ளவனாக இருக்கவேண்டும்.
நீ ஆவியில் பெருமையுள்ளவனாய், தேவனுடைய ராஜ்யத்தின் கதவை நீ தட்டித்தட்டிப் பார்த்தாலும் பிரயோஜனமில்லை. ஆனால் ஆவியில் எளிமையுள்ளவர்கள், தாழ்மையோடு தேவனுடைய ராஜ்யத்தின் கதவை (சிலுவையை – கிறிஸ்துவின் பதிலாள் மரணத்தை) ஏக்கத்தோடு பார்க்கும்போது, கிறிஸ்து அவர்களுக்கு அந்த கதவைத் திறந்துகொடுக்கிறார்.
ஆவியில் எளிமையுள்ளவன் என்ன செய்கிறான்:
• ஆவியில் எளிமையுள்ளவன் தன் சுயத்தை வெறுக்கிறான்,
• தன் தேவைகளை உணர்ந்து கிறிஸ்துவை சார்ந்து அவரை நோக்கி கெஞ்சுகிறவனாக, ஜெபிக்கிறவனாக இருக்கிறான்.
• ஆவியில் எளிமையுள்ளவன் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை தனது மிக முக்கியமானதாகக் கருதி, கிறிஸ்துவின் சுவிசேஷத்தைத் தொடர்ந்து கேட்கிறவனாக இருக்கிறான். ஆவியில் எளிமையற்றவன் கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் முக்கியத்துவத்தை உணராதவனாக இருக்கிறான். கிறிஸ்துவின் சுவிசேஷம் போதிக்கப்படும்போது, அது அவனுக்கு சளிப்பை ஏற்படுத்துகிறது. கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பகிர்வது அவனுக்கு சளிப்பாக இருக்கிறது. ஆனால், ஆவியில் எளிமையுள்ளவன் சுவிசேஷத்தையே தனது மிகமுக்கிய பொக்கிஷமாகக் கருதி அதற்காத தன் பணம், பொருள், ஆஸ்தி யாவையும் செலவிட ஆயத்தமுள்ளவனாக இருக்கிறான்.
• ஆவியில் எளிமையுள்ளவன் கிறிஸ்துவையும் அவர் கிருபையையும் மட்டுமே சார்ந்துகொண்டவன்.
ஆவியில் எளிமையுள்ளவர்களுக்கான பலன்:
• “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது.” மத் 5:3
கவணியுங்கள்: இங்கே ஆண்ட்வர், “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையதாக மாறும்.” என்று சொல்லவில்லை. மாறாக, “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது.” என்று நிகழ்காலத்தைக் குறித்துப் பேசுகிறார்.
ஆவியில் எளிமையுள்ளவர்கள் பரலோக ராஜ்யத்தை இப்போதே சுதந்தரித்துக் கொண்டவர்கள்.
ஆவியில் எளிமையுள்ளவர்கள் இப்பொழுதே தேவனுடைய ராஜ்யத்தில் மனிமகுடம் அனிந்து கிறிஸ்துவோடு உண்ணதங்களில் அமர்ந்திருக்கிறவர்கள்.
மனிதர்களுடைய ராஜ்யங்கள் இன்று எழும்பும், நாளைக் கவிலும். ஆனால், ஆவியில் எளிமையுள்ளவர்களுடைய ராஜ்யம் நித்தியமானது
1 பேதுரு 1:3-4 ->
3 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக;
4 அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்.
முடிவு:
சுவிசேஷ அழைப்பு:
நீங்கள் ஆவியில் எளிமையில்லாதவர்களாக, உங்கள் ஆத்தும தேவையை உணராதவர்களாக இருப்பீர்கள் என்று சொன்னால், இன்று கர்த்தருடைய பாத்தில் விழுங்கள். அவரே உங்கள் ஆத்தும தேவை என்று உணர்ந்தவர்களாக அவரை நோக்கிக் கெஞ்சுங்கள். கிறிஸ்து உங்களுக்கு வேண்டாம் என்று இருந்தீர்கள் என்றால் உங்கள் முடிவு பயங்கரமானதாக இருக்கும். (எபி 10:31)
விசுவாசிகளின் ஆசீர்வாதம்:
நீங்கள் ஆவியில் எளிமையுள்ளவர்களாக இருக்கிறீகளா! கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் கிறிஸ்துவோடு நீடூளி காலம் அரசாளலாம். நீங்கள் ஒருவேலை இந்த பூமியில் யாரும் அற்றவர்களாக, ஒன்றுமில்லாதவர்களாக, உங்களுக்கென்று ஒரு சொத்தும் இல்லாதவர்களாக இருக்கலாம், ஆனால் நீங்கள் சர்வர்த்துக்கும் சுதந்தரவாளியாகிய கிறிஸ்துவுக்கு உடன்சுதந்திரவாளிகளாக இருக்கிறீர்கள்.
விசுவாசிகளின் விடாமுயற்சி:
ஆவியில் எளிமையுள்ளவர்களாக இருக்க முயற்ச்சி செய்யுங்கள். கர்த்தருடைய வசனத்தை தியானியுங்கள். ஆவியில் எளிமையுள்ளவர்களாக கர்த்தருடைய பாத்தை நோக்கி அனுதினமும் கெஞ்சி வேண்டுதல் செய்யுங்கள்.
(Participate in Christ’s humiliation => Will participate in Christ’s exaltation.)
கிறிஸ்துவும் தம்முடைய பரலோக மகிமை யாவும் துரந்து, இந்த பூமிக்கு வந்தார். எளியவர்களாகிய நம்மை நம்முடைய தாழ்விடங்களிலிருந்து உயர்த்த ஏழ்மைக்கோலம் ஏற்றார். கிறிஸ்துவின் ஏழ்மைதான் உன்னை மேன்மைப்படுத்தும். கிறிஸ்து தம்முடைய கிரீடத்தை இரக்கிவைத்து சிலுவைக்குச் சென்றதால்தான் உன்னை அவர் மகிமையுள்ள வாடாத நித்திய கிரீடத்தால் அளங்கரிக்கிறார். கிறிஸ்து தம்மை வெறுமையாக்கியதுபோல, உன்னை நீ வெறுமையாக்கினால், உன் பாத்திரத்தை தமது கிருபையால் நிரப்ப ஆண்டவர் உண்மையுள்ளவராக இருக்கிறார்.
தேவன் தாமே இந்த சிந்தனைகளை நமக்கு ஆசீர்வதித்துக் கொடுப்பாராக! ஆமேன்.
பின் குறிப்பு: ஆவியில் எளிமையுள்ளவர்களால் தான் ஆவியில் துயரப்பட முடியும் (மத் 5:4).
"ஆவியில் ஏழ்மையுள்ளவர்கள் யாவரும் பாக்கியவான்கள் அல்ல; தான் ஆவியில் ஏழ்மையுள்ளவனாய் இருப்பதை உணர்ந்து கிறிஸ்துவின் சுவிசேஷத்தை மட்டுமே சார்ந்துகொள்கிறவனே பாக்கியவான். அவனே ஆவியில் எளிமையுள்ளவன்."