ஒவ்வொரு கிறிஸ்தவனும் தான் இரட்சிக்கப்பட்டிருந்தும் பாவம் செய்ய தூண்டப்படாமல் இருக்க முடியாது என்பதை அறிந்திருக்கிறான். அவன் அப்படிப்பட்ட தூண்டுதல்களை உடனே அழிக்க (Nib in the bud) வேண்டியவளாக இருக்கிறான். இது நமது சுயபலத்தால் முடியாது. பரிசுத்த ஆவியானவரின் உதவியால் மட்டும் அழிக்க முடியும். ஆவியினாலே சரீரத்தின் செயல்களை அழித்தால் பிழைப்பீர்கள் (ரோ. 8:13). விபச்சாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரக ஆராதனையான பொருளாசை ஆகிய இவற்றை பூமியில் உண்டு பண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப் போடுங்கள் (கொலோ. 3:5)
நம் எல்லோருக்குமே அழித்துப் போட ஆசை தான். ஆனால் எப்படி என்பது தான் கேள்விக் குறியாக இருக்கிறது. அதற்காக வேதம் கூறும் அறிவுரைகளைப் பார்ப்போம். இந்த அறிவுரைகளுக்குக் கீழ்படிந்தால் நாம் அழிக்க முடியும்.
1. பாவத்தை விட்டு விலகி ஓடு
நம் ஆத்துமாவுக்கு விரோதமாய் போர் செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலக வேண்டும் (1 பே. 2:11), வேசித்தனத்திற்கு விலகி ஓடுங்கள். (1 கொரி. 6:18; 2 தீ 2:22). இந்த காரியத்தைச் செய்ய கர்த்தரிடம் மன்றாடி விசுவாசத்தோடு காத்திருங்கள் என்று வேதம் சொல்லவில்லை. இது நாம் உடனே செய்ய வேண்டிய ஒரு காரியம். இதை நாம் தான் செய்ய வேண்டும். இதற்கு உதாரணம் யோசேப்பின் வாழ்க்கை (ஆதி 39:12, 13)
2. சரீரத்தைத் தூய்மையாகக் காத்துக் கொள்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டு துர்இச்சைகளுக்கு இடமளிக்காமல் சரீரத்தைக் காத்துக் கொள்ளுங்கள். (ரோ. 13:14) கிறிஸ்தவப் பெரும் தந்தை என்று அழைக்கப்பட்ட அகஸ்டின் மாம்ச இச்சைகளுக்கு அடிமையாகி மேற்கொள்ள முடியாமல் திகைக்கும் போது ஒரு நாள் எடுத்துவாசி, எடுத்து வாசி என்று சத்தம் கேட்டு, அருகில் உள்ள புதிய ஏற்பாட்டை எடுத்து வாசிக்கும் பொழுது இந்த வசனமே அவரை தூய அகஸ்டினாக மாற்றியது. பறவை நமது தலை மேல் பறப்பதை தடுக்க முடியாது. ஆனால் அது நமது தலையில் கூடு கட்டுவதைத் தடுக்க முடியும். இதேப் போல் திய எண்ணங்களுக்கு நாம் இடமளிக்காமல் அவற்றை தூய ஆவியானவர் உதவியினால் உடனே நீக்க வேண்டும்.
3. உன் இருதயத்தைச் சுத்திகரித்துக் கொள்
இயேசு கிறிஸ்து வெளிப்படும் போது அவருக்கு ஒப்பாயிருப்போம் என்று அறிந்திருக்கிறோம். ஏனெனில், அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்போம். அவர் மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிற எவனும், அவுர் சுத்தமுள்ளவராய் இருக்கிறது போல, தன்னையும் சுத்திகரித்துக் கொள்கிறான் (1 யோ. 3:2, 3). கிறிஸ்து இயேசுவின் சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது (பிலி. 2:5) நாம் இனி பாவத்திற்கு அடிமைப்படாதபடிக்குப் பாவ சரீரம் ஒழிந்து போகும் பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷீகம் கிறிஸ்துவோடு கூடச் சிலுவையில் அறையப்பட்டது என்று அறிந்திருக்கிறோம் (ரோ. 6:6) அப்படியே நீங்களும் உங்களைப் பாவத்துக்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக் கொள்ளுங்கள் (ரோ. 6:11).
நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக் கொடாமல், உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாகத் தேவனுக்கு ஒப்புக் கொடுங்கள். இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
4. வேதத்தை தியானம் பண்ணு
சங்கீதக்காரனின் ஆலோசனையின்படி கர்த்தருடைய வசனங்களை நமது இருதயத்தில் தியானித்துக் கொண்டிருக்கும் போது, பாவம் நம்மை விட்டு அகன்று போகும் (சங். 19 :11, 12) கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே 6) ஞானத்தோடும், பரிபூரணமாக வாசமாயிருப்பதாக (கொலோ. 3:16). நமது எதிரியான பிசாசை வீழ்த்தவும் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற ஒரே ஆயுதம் வேத வசனம் தான் (எபே. 6:17)
5. இடைவிடாமல் ஜெபம் பண்ணு
நாம் சோதனைகளில் வீழ்ந்து போகாமல் இருக்க நற்செய்தியாளர்கள் நமக்குக் கொடுக்கும் ஆலோசனை ஜெபம் ஆகும். (லூக் 21:36; 22:40; 11:4; மத்; 26:41). தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருங்கள். விழித்திருங்கள். ஏனெனில் உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாமோ என்று வகை தேடிச் சுற்றித் திரிகிறான். (1 பே. 5:8). ஜெபமே ஜெயம்.
6. சுயக்கட்டுப்பாட்டோடிரு
நமது சுயகட்டுப்பாட்டின் மூலம் பரிசுத்த ஆவியானவர் நமது மாம்ச கிரியைகளை அழிக்க உதவுகிறார். பிறருக்குப் போதிக்கிற நான் தானே தகுதி அற்றவனாகாபடிக்கு என் சரீரத்தை அடக்கிக்
கட்டுப்படுத்துகிறேன் என்று பவுல் கூறுகிறார். (1 கொ. 9:27), தங்கள் சுய முயற்சியினால் சரீரத்தைக் கட்டுப்படுத்த விரும்புகிறவர்கள் தங்களுக்கு இக்கட்டு உண்டாக்கிக் கொள்கிறார்களே தவிர அவர்கள் வெற்றி பெறுவதில்லை. கட்டுப்படுத்துதல் என்பது ஆசை இச்சைகளை அடக்கிக் கொள்வதே தவிர தண்டனைகள், நேர்ச்சைகள் மூலம் உடலை வருத்திக் கொள்வதில்லை.
7. பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்குள் அடங்கி இரு
தங்களை பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்கு உட்படுத்திக் கொள்கிறவர்கள் மாம்ச கிரியைகளை எளிதில் தவிர்க்கிறார்கள். நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்கு கிடைக்கும் பலன். முடிவோ நித்திய ஜீவன் (ரோ. 6:22) ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள். எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள் (ரோ. 8:13, 14) ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தல் என்பது நமது ஆயுள் முழுவதும் நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டிய ஒரு காரியம். நாம் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிற படியால் பாவம் நம்மை மேற்கொள்ளாது. (ரோ.6:14)
பிரியமானவர்களே, வேதம் கூறும் இவ்வாலோசனைகளின்படி மாம்சத்திலும், ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக் கொண்டால், நாம் எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்திர்க்குரிய பாத்திரமாயிருப்போம் (2 கொ. 7:1; 2 தீ. 2:21).
Christian Resource Centre, Tirunelveli Whatsapp: 9962045340