அப்போஸ்தல விசுவாசப்பிரமாணம்
வானத்தையும், பூமியையும் படைத்த சர்வவல்லமையுள்ள பிதாவாகிய தேவனை விசுவாசிக்கின்றேன்.
அவருடைய ஒரே பேறான குமாரனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன்.
அவர் பரிசுத்த ஆவியினாலே கன்னி மரியாளிடத்தில் உற்பவித்துப் பிறந்தார்.
பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் பண்ணப்பட்டு பாதாளத்தில் இறங்கினார்.
மூன்றாம் நாள் மரித்தோரிடத்தில் இருந்து எழுந்திருந்தார்.
பரலோகத்திற்கெழுந்தருளி, சர்வவல்லமையுள்ள தேவனின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
அவ்விடத்தில் இருந்து உயிருள்ளோரையும், மரித்தோரையும் நியாயந்தீர்க்க வருவார்.
பரிசுத்தாவியையும் விசுவாசிக்கிறேன்.
பொதுவாயிருக்கின்ற பரிசுத்த சபையையும் பரிசுத்தவாங்களுடைய ஐக்கியமும், பாவ மன்னிப்பும், சரீர உயிர்த்தெழுதலும், நித்திய ஜீவனும் உண்டென்று விசுவாசிக்கிறேன். ஆமேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக