தேடல் தொடர்கிறது ... - திரு. பொன்.வ.கலைதாசன் (சிறகடிப்பு)

ஈராயிரம் ஆண்டுகளாய் 
இறைமகன் தேடுகிறார்; 
இன்னும் கிடைக்கவில்லை,
தேடல் தொடர்கிறது...

அன்றும் இருக்கவில்லை,
இன்றும் கிடைக்கவில்லை.
இயேசு தேடுகிறார், 
தேடல் தொடர்கிறது...

எழுதும் நானுமல்லன்
படிக்கும் நீருமல்லர்; 
இறைவன் தேடுகிறார்,
தேடல் தொடர்கிறது...

அடுத்தடுத்த கல்லெறிய 
அளவற்றோர் இங்குள்ளார்; 
முதலாவது கல்லெறிய 
முழுத்தகுதி வாய்ந்த நபர்

ஒருவர் கிடைத்தாலும் 
தேடல் முடிந்துவிடும்; 
ஒருவரும் கிடைக்கவில்லை, 
தேடல் தொடர்கிறது...!


   சிறகடிப்பு (2015 ஜனவரி 
   பிப்ரவரி) இதழில் நான் எழுதியது.

#பொன்வக #பொன்வகலைதாசன் 
#பொன்வககவிதைகள் #ponvaka #ponvakalaidasan #ponvakapoems

கருத்துகள்