கிறிஸ்து யாருக்காக மரித்தார்? - John Owen
கிறிஸ்து யாருக்காக மரித்தார்?
பிதாவானவர் தமது கடுங்கோபத்தை குமாரன் மீது செலுத்தியதும், குமாரன் அந்த ஆக்கினையை அனுபவித்ததும் கீழுள்ள மூன்றில் ஒன்றுக்காகத்தான் இருக்க முடியும்:
குறிப்பு 1. எல்லா மனிதர்களுடைய எல்லா பாவங்களுக்காகவும்
குறிப்பு 2. குறிப்பிட்ட சில மனிதர்களுடைய எல்லா பாவங்களுக்காகவும்
குறிப்பு 3. எல்லா மனிதர்களுடைய சில பாவங்களுக்காக
இம்மாதிரியான சூழலில் நாம் கவணிக்க வேண்டிய விஷயம்:
அ. கடைசி குறிப்பு சரியாக இருந்தால், எல்லா மனிதர்களும் கணக்கு ஒப்புவிக்க வேண்டிய சில பாவங்கள் மீதம் உள்ளது. அப்படியானால் யாரும் இரட்சிக்கப்படவில்லை என்றாகிவிடும்.
ஆ. இரண்டாம் குறிப்பு சரியாக இருந்தால், கிறிஸ்து தெரிந்துகொள்ளப்பட்ட எல்லாருடைய எல்லா பாவங்களுக்காகவும் பாடுபட்டார். இதுவே சத்தியம்.
இ. முதல் குறிப்பு சரியாக இருந்தால், ஏன் எல்லா மனிதர்களும் அவர்களுடைய பாவங்களுக்கான தண்டனையிலிருந்து விடுதலையடையவில்லை. அவர்களுடைய விசுவாசமின்மை தான் காரணம் என்று நீங்கள் பதிலளிக்கிறீர்கள். நான் கேட்கிறேன், அவர்களுடைய அவிசுவாசம் பாவம்தானே? அது பாவம்தான் என்றால், கிறிஸ்து அந்த பாவத்திற்காகவும் பாடுபட்டாரா? கிறிஸ்து அவர்களுடைய அவிசுவாசம் என்ற பாவத்திற்காகவும் பாடுபட்டார் என்றால் எப்படி கிறிஸ்து பாடுபட்ட மற்ற பாவங்களைத் தாண்டி அந்த அவிசுவாசம் மட்டும் அவர்களுடைய இரட்சிப்புக்குத் தடையாக இருக்க முடியும்? கிறிஸ்து அவர்களுடைய அவிசுவாசம் என்ற பாவத்திற்காகவும் சேர்த்து பாடு படவில்லை என்றால், அவர் அவர்களுடைய எல்லா பாவங்களுக்காகவும் மரிக்கவில்லை என்றாகிவிடுமே!
- முனைவர். ஜோன் ஓவன் (1616-1683)
குறிப்பிட்டோருக்கான பாவப்பரிகாரபலி
Visit us: Evangelical Baptist Church, Madurai
For whom did Jesus die? - Dr. John Owen
கருத்துகள்
கருத்துரையிடுக